Main Menu

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாளைய தினம் கண்டியில் வைத்து, சஜித்பிரேமதாஸவின் கொள்கை பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

சஜித் பிரேமதாஸ கடந்த நாட்களில் பெண்கள், இளைய சமூதாயத்தினர் மற்றும் விவசாயிகளை சந்தித்ததோடு, அவர்களிடம் சில உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தார்.

அதனை அடிப்படையாக கொண்டே, நாளை வெளியிடப்படவுள்ள கொள்கை பிரகடனம் அமையவுள்ளது.

முன்னைய காலத்தில் சுயாதீன அரச சேவைகள் இடம்பெறவில்லை. எனினும் அதனை எம்முடைய அரசாங்கத்தின் காலத்திலேயே, சுயாதீன நிலைக்கு கொண்டு வந்தோம்.

அந்தளவில் அரச துறைசார் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக நிலவிய அழுத்தமானது, ஐக்கிய தேசியயின் ஆட்சி காலத்தில் இல்லாது செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...