Main Menu

சஜித்தின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

காலி முகத்திடலில் நாளை(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...