Day: October 9, 2019
“வெற்றிபெற்று அடுத்த நாள் காலை சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்வேன்” – கோட்டாபய
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன், சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் 17 ஆம் திகதி காலை விடுதலை செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்றுமேலும் படிக்க...
ஜெர்மனி – மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் 2 பேர் பரிதாபமாகமேலும் படிக்க...
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு
இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர். கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராகமேலும் படிக்க...
ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி
ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். 1981-ம்மேலும் படிக்க...
முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் மாறிவிட்டது : அதாவுல்லா
முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் ஏ.எல். எம்.மேலும் படிக்க...
ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – சஜித்
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருணத்தில் மக்கள் முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அது கடந்த 2015 ஆம் ஆண்டில் போராடிப்பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை தக்கவைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி முன்நோக்கிப் பயணிப்பதா அல்லது நுளம்புகளைப் போன்று மக்களைக் கொன்ற ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியதிகாரத்தைமேலும் படிக்க...
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்-மனோகணேசன்
2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பையேற்றபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின்மேலும் படிக்க...
பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு: உச்சநீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்
பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல்ஹாசன்இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் படிக்க...
சஜித்தின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை!
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. காலி முகத்திடலில் நாளை(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டமேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசாரமேலும் படிக்க...
பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள்மேலும் படிக்க...
ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்
ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை
பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தமேலும் படிக்க...
ஒரு தடவை எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள்
நாட்டை கட்டியெழுப்புவதானால் திருடர்கள் அற்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். மக்கள் சக்தியின்மேலும் படிக்க...