Main Menu

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை!

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மேலும், மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்டு 7-ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி, 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...