Main Menu

கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவவில்லை- மதுரை பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விஞ்ஞானி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையினர் வௌவால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 35 மாணவர்கள் வௌவாலின் குண நலன்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆய்வு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தேசிய விஞ்ஞான கழகத்தின் கௌரவ விஞ்ஞானியுமான மாரிமுத்து தெரிவிக்கையில்,

“உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை வௌவால்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கொரோனா குறித்து வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வெளவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

அல்பா வைரஸ், பிளா வைரஸ், வெஸ்க்யூ வைரஸ் மற்றும் ஆர்.பி. வைரஸ் போன்றவை வௌவால்களிடம் இருந்து பரவுகின்றமை கண்றியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று பரவாது. அதற்கான உயிரியல் ஆதாரங்கள் இல்லை.

எனவே தற்போதைய சூழ்நிலையில் வௌல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...