Main Menu

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் முடக்கநிலை விதிகள் எளிதாக்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒன்றாக சேர்ந்து எங்கள் எளிதாக்கல் வரைபடத்தில் மற்றொரு மைல்கல்லை அடைந்துள்ளோம். ஆனால் இந்த அடுத்த கட்டத்தை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை பரிசோதனை செய்வதன் மூலமும், அழைக்கப்படும் போது உங்கள் தடுப்பூசிக்கு முன்வருவதன் மூலமும், கைகள், முகம், இடம் மற்றும் புதிய காற்றை சுவாசிப்பதன் மூலமும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்’ என கூறினார்.

மில்லியன் கணக்கான மக்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே குறைந்த எண்ணிக்கையில் பழகலாம், அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடித்து மீண்டும் பப்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்லலாம். வெளிநாட்டு பயணங்களுக்கான தடையும் நீக்கப்பட்டு புதிய விதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது.

பகிரவும்...