Main Menu

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – மோடி

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசிய மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதற்கமைய, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த போரை மக்களும் நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. இந்த போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே.

சுகாதாரப் பணியாளர்களின் பணி போற்றப்படுகிறது. உலக நாடுகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...