கொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தினமும் 12 இலட்சம் கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 6.5 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகளவு பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க முடிகிறது.
தொற்று எண்ணிக்கை விகிதம் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மாநிலங்களிலும் அதிகளவு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.