Main Menu

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இதுவரை 2 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தற்போது நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 99 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐடிஎச் வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 10 பேரும் மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 255 பேர் நாட்டின் 21 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...