Main Menu

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவு – ரஷ்யா அறிவிப்பு

உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன.

பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மொஸ்கோ நகரிலுள்ள கமலியா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ நிறுவன தடுப்பூசியின் மனிதர்கள் மீதான சோதனை நிறைவடைந்துள்ளதாகவும், பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓகஸ்ட் 10 முதல் 12 ஆம் திகதிக்குள் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு, ஒக்டோபரில் மருத்துவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பகிரவும்...