Main Menu

Corbeil-Essonnes : 38 வயது நபருக்கு கத்தி குத்து

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  Corbeil-Essonnes நகரில் வசிக்கும் 38 வயதான ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5 மணி அளவில், குறித்த நபர் வசிக்கும் வீட்டின் அருகே இருந்து மிக சத்தமாக ஒலி எழுந்துள்ளது. இந்த சத்தம் தொடர்பான தகவல்கள் எதுவும் பெற முடியவில்லை. ஆனால் சத்தம் Robinson’s எனும் எதிரே உள்ள பூங்கா ஒன்றில் இருந்து எழுந்துள்ளது.  ‘சத்தம் அதிகமாக வருகின்றது, அதை குறைத்துக்கொள்ளுங்கள்’ என குறித்த நபர் சில இளைஞர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் பெரும் வாக்குவாதத்தில் முடிந்து, இறுதியில் வன்முறையில் முடிந்துள்ளது.  38 வயதுடைய குறித்த நபர் மீது பல்வேறு தடவைகள் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலை நடத்திய மூவர் தப்பி ஓடியுள்ளனர்.  தவிர,  இந்த அதிக ஒலி எழும்புவதை குறித்து புகார் அளிக்க நேற்று நள்ளிரவில் இருந்து கிட்டத்தட்ட 700 தொலைபேசி அழைப்புகள் 17 எனும் அவரச இலக்கத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது. 

பகிரவும்...