Main Menu

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆகவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்

மாவடடத்திற்கு முதற் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கியுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர், ஏனைய மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்டது.

இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

குறித்த தடுப்பூசிகள் பாதிப்பு அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அரியாலை பிறப்பன் குளம் மகா மாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்திலும் அரியாலை பிரதேச மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

பகிரவும்...