கொடநாடு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள்- தங்கம் தென்னரசு பேட்டி
ஜெயக்குமார் சட்டப் பேரவை தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அவர் மாறி மாறி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
கொடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். சட்டசபை வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு தலைமை செயலகத்தையே நடத்தி உள்ளதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதா மரணம், கொடநாடு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? என அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கை பாது காக்கக்கூடிய முதல்-அமைச்சர் சட்டத்தை பற்றி பேசக் கூடாது என்று ஜெயக்குமார் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த பிரச்சினையை சட்டசபைக்கு கொண்டு வந்ததே அ.தி.மு.க. தான். தனிப்பட்ட முறையில் யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெயக்குமார் சட்டப் பேரவை தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அவர் மாறி மாறி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.