Main Menu

கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். ரோம் நகரின் புறநகர் பகுதியான காசல் டெல் மார்மோசில் இளம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச் சாலை உள்ளது. இந்த ஜெயிலில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் தண்ணீரில் கழுவினார். பின்னர் அவர் கைதிகளின் பாதங்களை முத்தமிட்டார். இதில் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தினரும், பெண்களும் கலந்து கொண்டனர்.

பகிரவும்...