Main Menu

கேரளா மற்றும் புதுச்சேரியிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்களிப்பு!

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், காலை ஒன்பது மணி வரையிலான தேர்தல் வாக்களிப்பு நிலைவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தமிழகத்தில் 13.8 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்திருந்தார்.

இதேவேளை, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் தற்போது வரையான வாக்குப் பதிவு விபரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் ஒன்பது மணி வரையில் 16.42 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன். கேரளாவில் 9.30 மணி வரையான நிலைவரப்படி, 16.7 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...