Main Menu

குரோஷியா இசை நிகழ்ச்சியில் தீ விபத்து : தீவுத் திருவிழாவையும் நிறுத்திய காட்டுத் தீ!

குரோஷியாவில் இடம்பெற்ற புதிய தீவுத் திருவிழா இசை நிகழ்ச்சியில் காட்டு தீ பரவியதன் காரணமாக அங்கிருந்த மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு ஸ்ராஸ் கடற்கரையில் இடம்பெற்ற புதிய தீவு கடற்கரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வௌியேற்றப்பட்டனர்.

அந்த இசைநிகழ்ச்சியும் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூன்று தினங்களுக்கு ஹிப்-பொப் நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை அண்டிய நகரமான நோவல்ஜாவுக்குச் செல்லும் பாதைகளும் மூடப்பட்டன. பலர் தங்கள் விருந்தகங்களுக்கு செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களில் எஞ்சியிருந்தவர்களை அழைத்துச் செல்ல பொலிஸார் பேருந்துகளையும் ஏற்பாடு செய்திருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...