Main Menu

கிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்!

கிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

கிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இதன்போது செக்குடியரசைச் சேர்ந்த தம்பதியினரும், இரண்டு ருமேனியர்களும், இரண்டு ரஷ்யர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கிரீஸில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...