Main Menu

காவல்துறை அதிகாரி தற்கொலை! – இவ்வருடத்தின் 25 ஆவது சம்பவம்!

காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் Bayonne (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை 49 வயதுடைய David எனும் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், இவரது மறைவுக்கு சக அதிகாரிகள், காவல்துறை தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவ்வருடத்தில் இடம்பெறும் 25 ஆவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இதுவாகும். முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில் Choisy-le-Roi (Val-de-Marne) நகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் துணை காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

காவல்துறை அதிகாரிகளின் தற்கொலைகளை தவிர்க்கும் முகமாக அரசு 0800 95 00 17 எனும் கட்டணமற்ற தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...