Main Menu

காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்வு

காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் யார்? என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகைதமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அந்த கட்சிக்கான சட்டமன்றக்குழு தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. கட்சியின் மேலிடத் தலைவர்கள் பார்வையில் எம்.எல்.ஏ.-க்கள் வாக்களித்து தலைவர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் எம்எல்ஏ-க்கள் ஒன்று கூடி தலைவருக்கான பெயரை தேர்வு செய்தனர். ஆனால் தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

பகிரவும்...