Main Menu

கமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்!

தமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டதாக அவர் இன்று (புதன்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ‘மாற்றத்திற்கான கூட்டணி’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி உறுதியானதாகவும் மக்கள் விரும்பும் கூட்டணியாக தமது அணி இருக்கும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

அத்துடன், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்தான் எனவும் தமிழகத்தில் கோவில்பட்டி, ராதாபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென்காசி, ஆலங்குளம் என எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் தான் போட்டியிடத் தயாராகவுள்ளதாக சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கை குலுக்கிச் சென்றுவிட்டதால் கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தம் இல்லையென கமல்ஹாசன் இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி உறுதியாகியுள்ளது என்ற சரத்குமாரின் அறிவிப்புக் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பகிரவும்...