Main Menu

கனரக வாகனத்துக்குள் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் அகதிகள்!

கனரக வாகனம் ஒன்றில் இருந்து 31 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். வாகனம் A8 நெடுஞ்சாலையில் பயணித்திருந்தது.  Nice நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இத்தகவலை நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.  

இத்தாலி எல்லைக்கு அருகே La Turbie (Alpes-Maritimes) சுங்கச்சாலைக்கு அருகே வைத்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கனரக வாகனம் ஒன்றுக்குள் 31 பாக்கிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் மறைத்து அழைத்துச் செல்லப்பட்டனர்.  

வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை மீட்டதோடு அனைவரையும் கைது செய்துள்ளனர். அகதிகளை கடத்திய நபர்கள் குறித்த தகவல்களை தாம் திரட்டி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இத்தாலி எல்லையில் 24 மணிநேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...