Main Menu

கட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை

கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவப் போட்டியில் போரிஸ் ஜோன்சனுக்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவ போட்டிக்கான இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் 40 சதவிகித ஆதரவு போரிஸ் ஜோன்சனுக்கு கிடைத்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம் என்ற உறுதியான வாக்குறுதி வழங்கியிருந்ததை  அடுத்து அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

அந்தவகையில் 313 பேர்கொண்ட உறுப்பினர்களில் 126 பேரின் ஆதரவுடன் அவர் இரண்டாவதுகட்ட வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த போட்டியின் முதலாம்கட்ட வாக்கெடுப்பின்போது 114 வாக்குகளை போரிஸ் ஜோன்சன் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...