Main Menu

கடவுளின் பேரில் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய 13 வயது சிறுவன் கைது!

collège நிர்வாகி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த 13 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.  Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள collège Marcel-Pagnol இல் இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் நண்பகல் வேளையில் collège இற்குள் நுழைந்தனர். 13 வயதுடைய சிறுவன் ஒருவன் குறித்த collège இன் உயரதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், “அல்லாவின் பேரில் கொலை செய்யப்போவதாக” குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.  உடனடியாக காவல்துறையினர் குறித்த சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பகிரவும்...