Main Menu

காவல்துறை அதிகாரியின் முகத்தில் குத்தி எச்சில் துப்பிய பெண்

பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.  இச்சம்பவம் இவ்வார புதன்கிழமை Clichy-sous-Bois (Seine-Saint-Denis) நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. Liberties வீதி கடவைக்கு எதிரே அமைந்துள்ள குறித்த காவல்நிலையத்துக்கு பெண் ஒருவர் வருகை தந்துள்ளார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனது சகோதரனை பார்ப்பதற்காக அவர் வருகை தாந்துள்ளார்.  ஆனால் வரவேற்பு பகுதியில் நின்றிருந்த காவல்துறை அதிகாரி, கைதான நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என அனுமதி மறுத்துள்ளார். இதனால் கோபடைந்த குறிந்த பெண் குறித்த அதிகாரியின் முகத்தில் குத்தியுள்ளார். பின்னர் அவரது முகத்தில் எச்சில் துப்பியுள்ளார்.  பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய அப்பெண்ணை சில நிமிடங்களில் காவல்துறையினர் கைதுசெய்தனர். 

பகிரவும்...