Main Menu

கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள்: கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை – மத்திய அமைச்சர் உறுதி

கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள் பிரச்சனையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பியான கனிமொழி பேசினார்.

இவரது கோரிக்கையை மத்திய அமைச்சர் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சிறப்புக்குழு அனுப்பி பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘தமிழ்நாட்டில் 600 ஹெக்டேரில் மாங்குரோவ் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடலோரத் தாவரங்கள் வளர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமக்கு தமிழ்நாட்டில் கடல் உட்புகுதலால் கிராமங்கள் அழிகின்றன என்று அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கனிமொழி, தூத்துக்குடியிலேயே கடலோர கிராமங்கள் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அதுபற்றி தனக்கு உடனே தகவல் கொடுங்கள் என்றும் தான் உடனடியாக ஒரு சிறப்புக் குழுவை அனுப்புவதக்கவும் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 19 ஆம் திகதி மக்களவையில் பேசிய கனிமொழி, இந்தியா தனது கடற்கரைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை கடல் அரிப்பின் காரணமாக இழந்திருப்பதாக சுட்டிக் காட்டி இருந்தார்.

இதில், தமிழ்நாட்டில் சுமார் 41 சதவிகிதம் கடற்கரைப் பகுதிகள் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் போய்விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

பகிரவும்...