Main Menu

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடல் பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில் வர்த்தகத்திற்கு உகந்த துணையாக விளங்குவதாக கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் 41 புதிய கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...