Main Menu

கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

இராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், நிரந்தர பணிகளில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

இராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்களுக்கு நிகரான பதவிகளையும் சலுகைகளையும் பெண்களும் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகிரவும்...