Main Menu

ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த இரு துருப்பினர் மாலியில் உயிரிழப்பு

மாலியில் வடபகுதியில் ஐ.நா. அமைதிப்படையினர் பயணித்த வாகனத் தொடரணி மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இரு துருப்பினர் உயிரிழந்ததாக மாலியில் நிலை கொண்டுள்ள ஐ.நா. அமைதிப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை ரெஸ்ஸாவிட் மற்றும் கயோ ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இனந்தெரியாத ஆயுததாரிகள் ‘மினுஷ்மா’ எனப்பெயரிடப்பட்ட இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக நேற்று ஐ.நா. அமைதிப்படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரிகள் மீது அமைதிப்படையினர் திருப்பித் தாக்குதலை மேற்கொண்ட போதும், அவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் உயிரிழந்த இரு துருப்பினரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

மாலியில் கடந்த மாதம் அமைதிப்படையினரின் வாகனத்தொடரணி மீது நடத்திய வீதியோர குண்டுத் தாக்குதலில் சாட் நாட்டைச் சேர்ந்த மூன்று துருப்பினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில், மேலும் நான்கு துருப்பினர் காயமடைந்தனர்.

பகிரவும்...