Main Menu

ஐரோப்பிய நாடுகளைக் குறி வைத்து தாக்குங்கள் – அல்கொய்தா தலைவர்

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளுமாறு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறைகூவல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18-வது ஆண்டு நினைவு நாள் நேற்று(புதன்கிழமை) அனுசரிக்கப்பட்ட நிலையில் காணொளி ஊடாக அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு தாக்குதலுக்கு அறைகூவல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சஹாப் மீடியோ அறக்கட்டளை வெளியிட்டுள்ள குறித்த காணொளியினை ஜிகாதிகளைக் கண்காணித்து வரும் எஸ்ஐடிஇ புலனாய்வுக் குழு ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ‘அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது.

ஜிகாதியாக மாறிவிட்டால், நம்முடைய நோக்கம் முழுமையும் இராணுவத்தை இலக்காக வைக்க வேண்டும். அமெரிக்க இராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தங்களின் இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க இராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களினால் சிதறிடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன.

இதைத் தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...