Main Menu

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 07 ஆயிரத்து 118 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று பிரான்சில் 7 இலட்சத்து 56 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12 ஆயிரத்து 993 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 04 ஆயிரத்து 585 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...