Main Menu

ஐப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை இந்த பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Reiwa’ என ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் குறித்த பெயர் ‘ஒழுங்கு’, ‘மங்களகரம்’, ‘அமைதி’, ‘நல்லிணக்கம்’ ஆகியவற்றைக் குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரரசர் அக்கிஹிட்டோ அரியணை ஏறியதிலிருந்து இதுவரையுள்ள 31 ஆண்டு காலம், ஹெய்ஷி யுகம் என்றழைக்கப்பட்டது. அது அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30திகதி அரியணையைத் துறக்கும்போது முடிவுக்கு வரவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி, பட்டத்து இளவரசர் நொருஹிட்டோ ஜப்பானின் புதிய பேரரசராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புதிய – யுகத்தின் பெயர் அறிவிக்கப்படுவது ஜப்பானிய வழக்கம். இதற்கமையவே புதிய யுகத்திற்கான பெயர் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ‘Heisei’ யுகம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ‘Reiwa’ யுகம் அதிகாரபூர்வமாகத் ஆரம்பமாகவுள்ளது.

7ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஜப்பானில் சுமார் 250-யுகங்கள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...