Main Menu

எஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம்பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். தற்போது இந்த ஆலோசனையில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி, மற்றும் அவரது மகன் சரண், மகள் பல்லவி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் எஸ்.பி.பி.யை காண இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் மருத்துவமனை வர உள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மருத்துவமனை தரப்பில் விரைவில் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பகிரவும்...