Main Menu

எஸ்.பி.பி. எப்படி இருக்கிறார்? – ரசிகர்கள் பலர் கோரிக்கை

எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நலம் குறித்த தற்போதைய செய்தியை வெளியிடுமாறு ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் மெல்ல, மெல்ல குணமடைந்து வந்தார்.

விரைவில் வீடு திரும்ப அப்பா ஆவலாக இருக்கிறார் என்று மகன் சரண் அப்டேட் கொடுத்தார். இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.

மிகவும் கவலைக்கிடம் என்கிற வார்த்தையை பார்த்த பலருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. மீண்டும் எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று பலரும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்த கமல்

இந்நிலையில் எஸ்.பி.பி. யின் நிலைமை குறித்து நேற்று இரவு வதந்தி வேறு பரவியது. மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட வேகத்தில் கமல் ஹாசன் எஸ்.பி.பி.யை பார்க்க அங்கு விரைந்து வந்தார். கமல் வந்த வேகத்தை பார்த்த இசை ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு எஸ்.பி.பி.யின் நிலைமை குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. தூங்கி எழுந்த அனைவரும் முதல் வேலையாக செல்போனில் பார்த்தது எஸ்.பி.பி. பற்றி தான். தயவு செய்து அவரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அப்டேட் கொடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்பான செய்தி

உடனே மருத்துவமனைக்கு வருமாறு எஸ்.பி.பி. குடும்பத்தாரிடம் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் கவலைக்கிடமாக இருந்த அவர் பின்னர் குணமானார்.

இந்நிலையில் அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு வருமாறு எஸ்.பி.பி. குடும்பத்தாரை மருத்துவமனை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.

பகிரவும்...