Main Menu

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் உயிரிழப்பு?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில், 46 வயது ஊழியர் மகிபால் சிங்கிற்கு கடந்த 16ஆம் திகதி கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று மாலை நெஞ்சுவலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசி போட்டதில் இருந்தே மகிபால் சிங் சிரமப்பட்டதாகவும் அவரது இறப்புக்கு தடுப்பூசியின் பக்க விளைவே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடளித்துள்ளனர்.

ஆனால், தடுப்பூசி ஏற்றிய பின்னர் மகிபால் சிங் இரவுப் பணியில் இருந்தார் என்றும், பிரேதப் பரிசோதனையில் தடுப்பு மருந்துக்கும் மரணத்திற்கும் சம்மந்தமில்லை என தெரியவந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...