Main Menu

உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்: தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தலிபான் பிரச்சார வலைத்தளத்தை நடத்தும் தாரிக் கஸ்னிவால், காபூல் விமான நிலையத்தில் தலிபான் குழுவின் தலைவர்களின் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் ஒன்று, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித் ஒரு போராளிகள் குழுவில் உரையாற்றுவதை காணமுடிகிறது.

அவர்களுடைய முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு ‘சுதந்திரம் பெற்றமைக்காக’ அவர்களை வாழ்த்தினார்.

‘உங்கள் தியாகங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதற்கு காரணம் நீங்களும் எங்கள் தலைவர்களும் அனுபவித்த கஷ்டங்கள் தான். இன்று (எங்கள் தலைவர்களின்) நேர்மை மற்றும் பொறுமை காரணமாகவே நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.

எனவே நான் உங்களையும் ஆப்கானிஸ்தான் நாட்டையும் வாழ்த்துகிறேன். எங்கள் நாடு மீண்டும் ஒருபோதும் படையெடுக்கப்படக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். நாங்கள் அமைதி, செழிப்பு மற்றும் உண்மையான இஸ்லாமிய அமைப்பை விரும்புகிறோம்’

உங்கள் மக்களுடன் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கும்படி நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த தேசம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் அன்புடனும் அனுதாபத்துடனும் நடத்தப்பட வேண்டும். எனவே, அவர்களிடம் மென்மையாக இருங்கள். நாங்கள் அவர்களின் ஊழியர்கள். நாங்கள் அவர்கள் மீது நம்மை திணிக்கவில்லை’ என கூறினார்.

மேலும், தலிபான் போராளிகளை ஆப்கான் மக்களிடம் மென்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பகிரவும்...