Main Menu

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நிர்வாகம் தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் நாளையும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பட்டிருந்த நிலையில் இத்தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் அனைத்துபீட மாணவர்களுக்கும் உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருடம் தோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரப்பட்டு வருவது வழமை.

இந்நிலையில் இம்முறையும் நொவெம்பர் 27 ஆம் திகதியான மாவீரர் நாள் அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ் பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் நாளையும் எந்த நிகழ்வும் நடத்தப்படக் கூடாது எனத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...