Main Menu

ஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா நாடு முறித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தார். அன்றில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. 

இதனையடுத்து அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது.  போர் சூழல் நிலவி வருகிறது. ஈரான், பதிலடியாக யுரேனியம் தயாரிப்பை அதிகரித்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் நிலவி வருகிறது. 

தற்போது கடந்த 2015ம் ஆண்டு போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அளவை யுரேனியம் தயாரிப்பு எட்டியுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘அவர்கள் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். யுரேனியத்தின் அளவை அதிகரித்து ஈரான், நெருப்போடு விளையாடி வருகிறது’ என கூறியுள்ளார்.  

முன்னதாக ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷரீப் கூறுகையில், ‘நாங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறவில்லை. 

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒப்பந்தப்படி நடந்துக் கொண்டால் நாங்கள் யுரேனியம் தயாரிப்பதை நிறுத்திக் கொள்வோம்’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...