Main Menu

ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது!

ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், இன்ஸ்ரகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடான ஈரான் சட்டங்களின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதுடன் தொழில்முறையாக யோகா பயிற்றுவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...