Main Menu

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துங்கள் – மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்து

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான தற்போதைய பொறுப்புக்கூறல் திட்டத்தை வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கு இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பொறிமுறைகளின் அவசியத்தை உணர்ந்து, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைசர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பகிரவும்...