Main Menu

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யுனைடெட் தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், இலங்கை தௌஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஈராக் மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்லஸ் மற்றும் சூப்பர் முஸ்லீம் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

பகிரவும்...