Main Menu

இயற்கைக்‍கு எதிராக மனிதர்கள் செய்துவரும் செயல்களால் வருங்காலத்தில் தொற்று நோய்கள் உண்டாகும் – ஐ.நா. எச்சரிக்‍கை

இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள், வருங்காலத்தில் பல்வேறு தொற்று நோய்களை உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் போன்று 8 லட்சத்து 50 ஆயிரம் வைரஸ்கள் விலங்குகளிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது – அவை மனிதர்களை தாக்கக் கூடும் – இயற்கைக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகள் வருங்காலத்தில் பல தொற்று நோய்களை உண்டாக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...