Main Menu

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

அந்தவகையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 62 ஆயிரத்து 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 25 ஆயிரத்து 409 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் புதிதாக 899 உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13 இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை 6 இலட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 684 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், 110 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பகிரவும்...