Main Menu

இந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை!

ராஜஸ்தான் மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்த குறித்த 6 வயது சிறுமி அரச பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்று வருகின்றார்.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை வழமைபோல் பாடசாலைக்கு சென்ற குறித்த சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் காணப்பட்ட புதர்களுக்கு இடையே குறித்த சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சிறுமியின் சீருடையில் காணப்பட்ட பட்டி ஒன்றினால் அவரது கழுத்து நெரிக்கப்படிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பகிரவும்...