Main Menu

இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற் கொள்ளலாம்: புதிய விபரம் வெளியீடு!

புதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் திரும்பி வரும்போது, சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்போ அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு சோதனை எடுக்க வேண்டும்.

பச்சை மற்றும் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து திரும்பும் குழந்தைகள் சுயமாக தனிமைப்படுத்தத் தேவையில்லை, ஆனால் அவர்கள் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

செம்மஞ்சள் பட்டியல் தனிமைப்படுத்தப்பட்ட ஆலோசனையின் மாற்றம் இங்கிலாந்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளும் இதைப் பின்பற்றுமா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தற்போது ஒரே பச்சை பட்டியலைக் கொண்டுள்ளன

கொரோனா ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் பச்சை பட்டியலிலும், ஆபத்தாகக் கருத்தப்படும் நாடுகள் செம்மஞ்சள் பட்டியலிலும், மிக ஆபத்தாகக் கருதப்படும் நாடுகள் சிவப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

பச்சை பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. ஆனால் அவர்கள் 2 நாட்களுக்கு பிறகு பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

அங்குய்லா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, அவுஸ்ரேலியா, பார்படாஸ், பர்முடா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், புரூனே, கேமன் தீவுகள், டொமினிகா, பால்க்லாந்து தீவுகள், ஜிப்ரால்டர், கிரெனடா, ஐஸ்லாந்து, இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம், மடெய்ரா, மால்டா, மான்ட்செரட், நியூசிலாந்து, சிங்கப்பூர், தெற்கு ஜோர்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், டர்க்ஸ் மற்றும் கெய்காஸ் தீவுகள் ஆகியவை பச்சை பட்டியலில் அடங்கும்.

செம்மஞ்சள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்று இருந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. அவர்கள் நாடு திரும்புவதற்கு 3 நாட்கள் முன்னதாக பிசிஆர் டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து திரும்பியபின் 2ஆம் நாள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட இடங்கள் செல்வதற்கு முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனை, இங்கிலாந்தில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 2 மற்றும் நாள் 8ஆம் நாள் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆஸ்திரியா, பஹாமாஸ், பெல்ஜியம், கனடா, சீனா, குரோசியா, சைப்ரஸ், பிரான்ஸ், கிரேக்கம், இந்தோனேசியா, இத்தாலி, மெக்ஸிகோ, போர்ச்சுக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்டவை செம்மஞ்சள் பட்டியலில் உள்ளன.

செம்மஞ்சள் அல்லது பச்சை பட்டியல்களில் இல்லாத அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் உள்ளன. சில செம்மஞ்சள் பட்டியல் நாடுகளும் சிவப்பு கண்காணிப்புப் பட்டியலில் உள்ளன.

பயணிகளுக்கு முழு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், அவர்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு பி.சி.ஆர் பரிசோதனை செய்து, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் தொகுப்பை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து திரும்பும் அவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2 மற்றும் 8ஆம் நாள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பகிரவும்...