Main Menu

ஆவடியில் இன்று பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு நிறைவு விழா- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு 

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று மாலை நடக்கிறது. பால் வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பின்னர் ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். ஆவடி வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று நகர் முழுவதும் தி.மு.க. கொடிக்கம்பங்கள், வரவேற்பு பதாகைகள் என ஆவடி மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆவடி மாநகர தி. மு.க. செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான எஸ்.என்.ஆசிம் ராஜா செய்து வருகிறார்.

பகிரவும்...