Day: December 16, 2022
மலேசியாவில் திடீர் நிலச்சரிவு: மீட்புப்பணிகள் தீவிரம்
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில்,இன்று அதிகாலை இந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக்கொண்டனர்.மேலும் படிக்க...
ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் இணைப்பு
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரஷிய ராணுவத்தில் புதிதாகமேலும் படிக்க...
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகர புறநகர் பகுதியில் உள்ள வோல்க்ஸ்-என்-வெலின் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 170 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில்மேலும் படிக்க...
ஆவடியில் இன்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று மாலை நடக்கிறது. பால் வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சா.மு.நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இளைஞர் நலன்மேலும் படிக்க...
மக்கள் பேராதரவுடன் வெற்றிப் பயணம்… ராகுல் காந்தியின் யாத்திரை இன்னும் பலம் பெறும்: விஜய் வசந்த் வாழ்த்து
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், 100-வது நாளை எட்டியதையடுத்து, காங்கிரசார் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:- பாசிச சக்திகளிடம் இருந்து இந்தியாவை விடுவித்து இந்தியர்களை ஒன்றிணைக்கும் நல்நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்றுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எஸ்.எம் மரிக்காரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்தார். கட்சியின் ஊடகப் பேச்சாளாராகவும், உதவிமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஊடகப் பணிப்பாளர் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர், ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். குடிபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறியதுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.ஞானப்பிரகாசம் இராசையா (16/12/2022)
தாயகத்தில் உரும்பிராயை சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்கள் 16ம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்ற ஞானப்பிரகாசம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,மேலும் படிக்க...