Main Menu

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் – குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாணத்திற்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரில் சிறிய ரக பேருந்தொன்றை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.

ஜலாலாபாத் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தொன்று சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போதே நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்போது, வீதியோரத்தில் ஒரு ரிக்‌ஷாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள் வெடித்து சிதறின.

தலிபான்கள் தீவிரவாதிகள் நடத்தியதாக கருதப்படும் இந்த தாக்குதலில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்த 27 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பகிரவும்...