Main Menu

ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!

மக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது பிறந்தநாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 95 ஆவது பிறந்தநாளில் தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய துக்கத்தில் குடும்பம் ஆழ்ந்துள்ள நேரத்தில், தனது கணவருக்கு பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த இரங்கல் செய்திகளால் தாம் மிகவும் ஆறுதல் அடைந்ததாக மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

மேலும் இளவரசர் பிலிப் தனது வாழ்நாளில் இத்தனை பேருடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை மக்களின் இரங்கல் செய்திகள் நினைவு படுத்தியதாகவும் பிரித்தானிய மகாராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...