Main Menu

ஆட்டோ சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணம், கைத்தொலைபேசி கொள்ளை!

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்த பின் தப்பிச் சென்ற சம்பவம் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு  அருகில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நேற்று (10) மாலை இருவரும் திவிகஹவெல பகுதிக்கு செல்ல முச்சக்கரவண்டியில்  ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சாரதியை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் திவிகஹவெல   பிரதேசத்தில்  வெறிச்சோடிக் காணப்பட்ட  காணி ஒன்றுக்கு முச்சக்கரவண்டி சாரதியை  அழைத்துச் சென்று அவரிடமிருந்த  பணம் மற்றும் தொலைபேசி  என்பனவற்றைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பகிரவும்...