Main Menu

அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தத்தை மேற்­கொண்டு சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வழி­வ­குக்க முயற்சி: ஜே.வி.பி

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­டன உரையில் நாட்­டுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பல விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று தெரி­விப்­ப­தா­னது சர்­வா­தி­கார போக்­குக்கு வழி­வ­குக்கும் கார­ணியைப் போன்­றுள்­ளது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­னா­யக்க தெரி­வித்தார்.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வில் முன்­வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­ட­ன­உரை தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போது இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது:

பாரா­ளு­மன்ற சுதந்­தி­ரத்தை வரை­ய­றுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­னோ­டி­யா­கவே ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­டன உரை அமைந்­துள்­ளது.

நிறை­வேற்­ற­தி­கார முறையை மேலும் ஸ்திர­மு­டை­ய­தாக்கி சர்­வா­தி­கார ஆட்­சிக்கு செல்­லவே முயற்­சிக்­கின்­றனர். இந்த முயற்­சி­க­ளுக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் இட­ம­ளிக்­காது.

அதேவேளை அர­சாங்கம் நாட்­டுக்கு நன்மை தரும் வகையில் ஏதேனும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தால் அதற்கு எமது முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­குவோம். அதேபோன்று நாட்­டுக்கு பாத­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்டால் அவற்­றுக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யி­டுவோம்.

நாட்­டுக்­காக ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்கை பிர­க­ட­னத்தை ஏற்றுக் கொள்­கின்றோம். எனினும் அதில் கூறப்­பட்­டுள்ள சில விட­யங்­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அவ்­வா­றான விடயங்கள் தொடர்பில் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் எமக்கும் வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்டும்.

எவ்­வா­றி­ருப்­பினும் கட்சி மற்றும் இன,மத பேத­மின்றி அனை­வரும் ஒன்றிணைந்து நாட்டுக்கான சேவையை தொடர்ச்சியாக முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். இந்த பயணத்தின் போது அரசாங்கத்தின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை நல்ல விடயங்களை ஊக்குவிப்பதற்கும் முன்வருவோம் என்றார். 

பகிரவும்...